Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்: பொன்னமராவதியில் அதிமுகவினர் அமைதிப் பேரணி.

புதுக்கோட்டை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி பொன்னமராவதியில் அதிமுக மாவட்டச்செயலர் பி.கே. வைரமுத்து தலைமையில் நடந்த அமைதிப் பேரணி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில்  அதிமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் தமிழக வீட்டு வசதி வாரியத்தலைவருமான பி.கே.வைரமுத்து தலைமையில் புதுவளவிலிருந்து காந்திசிலை, அண்ணா சாலை, பேருந்து நிலையம் வழியாக கட்சி அலுவலகம் வரை அமைதி பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக மாவட்டச்செயலர் பி.கே. வைரமுத்து

இதையடுத்து கட்சி அலுவலகம், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த ஜெயலலிதா  உருவப்படத்திற்கு மாவட்ட கழக செயலாளர் பி.கே. வைரமுத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அதிமுக நிர்வாகி பி.கே.வி. குமாரசாமி, பொன்னமராவதி கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி.கண்ணப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் அரசமலை முருகேசன், நகரச்செயலாளர் பழ. ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், அதிமுக பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top