Close
செப்டம்பர் 20, 2024 1:32 காலை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

ஈரோடு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர். உடன் முன்னாள் அமைச்சர் கேசி. கருப்பண்ணன், எம்எல்ஏ ஜெயகுமார் உள்ளிட்டோர்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 25 பேர்  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்  அதிமுகவில் இணைந்தனர்.

பெருந்துறை கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த 25 மாற்றுக் கட்சியினர்  அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த திமுக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியைச் சேர்ந்த 25 பேர் அக்கட்சியில் இருந்து விலகினர்.

பெருந்துறை கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில்   எடப்பாடியில்  ஈரோடு புற நகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே. சி கருப்பண்ணன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள் ஜோதி என்கிற செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  அனைவரும்   அதிமுகவில் இணைந்தனர். இவர்களுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  சால்வை அணிவித்து  அதிமுவில்  இணைத்துக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top