Close
செப்டம்பர் 19, 2024 8:55 காலை

அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் 35 -வது ஆண்டு நினைவு நாள்.. குடியாத்தம் அதிமுகவினர் அஞ்சலி

வேலூர்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி குடியாத்தம் நகர அதிமுக சார்பில் உருவச்சிலைக்கும் படத்துக்கும் மரியாதை செய்தனர்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர அதிமுக சார்பில்  அதிமுக நிறுவனர். முன்னாள் முதல்வர் அமரர்  எம்ஜிஆரின்  உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

வேலூர் புறநகர் மாவட்டம், குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35வது ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து அலங்கரித்து வைக்கப்பட்ட எம்ஜிஆர் படத்துடன் ஊர்வலமாக சென்று காமராஜர் பாலம் அருகே உள்ள  எம்ஜிஆர்,  ஜெயலலிதா ஆகியோரின்  உருவச்சிலைகளுக்கு குடியாத்தம் நகர கழக செயலாளர் ஜே.கே.என்.பழனி  தலைமையில்  நிர்வாகிகள்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதில்,  மாவட்ட  துணைச் செயலாளர்கள் கஸ்பா ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா சிவப்பிரகாசம், நகரமன்ற துணைத் தலைவர் எம்.பூங்கொடி மூர்த்தி, முன்னாள் நகர்மன்ற தலைவர் மாயாபாஸ்கர், நகர துணைச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், நகர பொருளாளர் வி.என்.தனஞ்செயன், வழக்குரைஞர் கே.எம்.பூபதி, கே.அமுதா கருணா.

மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.என்.சுந்தரேசன், ஆர்.அட்சயா வினோத்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் எஸ்.ஐ.அன்வர் பாஷா, ஆர்.கே.மகாலிங்கம், மு.நகரமன்ற து.தலைவர் எஸ்.டி.மோகன்ராஜ், ஜி.தேவராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் கே.லாவண்யா குமரன், ஏ.தண்டபாணி, ஏ.சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு நகர  செயலாளர் ஜே.கே.என்.பழனி,  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

…நிருபர்-வேலூர் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top