Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

பொங்கல் தொகுப்புடன் கரும்பு… முதல்வருக்கு திமுகவினர்.. நன்றி

ஈரோடு

பெருந்துறையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினர்

பெருந்துறை திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொங்கல் பரிசுதொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கரும்பு வழங்க அனுமதி வழங்கிய தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பெருந்துறை அண்ணாசிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர பி.சின்னசாமி
தலைமை வகித்தார். பொது குழு உறுப்பினர்பூபதி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் செயலாளர்  திருமூர்த்தி, பெருந்துறை தெற்கு ஒன்றிய அவைத் தலைவர்  சுப்பிரமணி, பெருந்துறை தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் துர்காதேவி,

நித்திக்குமார்,கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் சக்திக் குமார், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் வார்டு நிர்வாகிகள், பிரகாஷ், மோகன், ஆட்டோ குமார்,செல்வன், நாகராஜ், சரவணன், சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top