Close
செப்டம்பர் 20, 2024 10:01 காலை

புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக விவசாய அணியினர்

புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி   மேற்கு மாவட்ட  விவசாய அணி சார்ரபில்   கவன ஈர்ப்பு போராட்டம்   நடைபெற்றது.

கோரிக்கை: தேங்காய் விலை விழ்ச்சியால்  விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். மாநில அரசு பொங்கல் தொகுப்பில்  தேங்காயும் சேர்த்து வழங்க வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு  அறப்போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகர் திடலில் நடந்த  ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய அணி மாநில  துணைத் தலைவர்  ஆர்.இளங்கோ தலைமை வகித்தார்.  இதில் புதுக்கோட்டை விவசாய அணி ராகவன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் புரட்சிகவிதாசன், நிர்வாகிகள்     விஜயக்குமார், லெட்சுமணன்  உள்ளிட்ட நிர்வாகிகள்  தேங்காய்  மற்றும் இளநீர் கையில்  ஏந்தி  கோரிக்கை முழக்கமிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top