Close
செப்டம்பர் 20, 2024 1:35 காலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகும் அதிமுக

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ மறைவையொட்டி  விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் அக்கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. வி. ராமலிங்கம்.

ஈரோட்டில் உள்ள அதிமுக  கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலை சந்திக்க ஏதுவாக  வார்டு செயலாளர் களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கிய பின்னர்,  முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் பேசியதாவது:

திமுக பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நல திட்டங்களை நிறுத்தி உள்ளது. சொத்து வரி, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு காரணமாக ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் குறைந்தபட்சம் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் பத்தாயிரம் வரை இந்த அரசு சுமையை ஏற்றி உள்ளது. அதனால் பொதுமக்கள் திமுக ஆட்சியின் மிகவும் வெறுப்புடன் உள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2500 வழங்கினார். அப்பொழுது தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் ஐயாயிரம் வழங்க வேண்டும் என கூறினார். ஆனால் கடந்தாண்டு பொங்கலுக்கு எந்த நிதி உதவியும் அவர் செய்யவில்லை. மாறாக தரம் குறைந்த மளிகை பொருட்களை மக்களுக்கு வழங்கினார்.  தற்போது ரூபாய் ஆயிரம் மட்டும் மக்களுக்கு வழங்குகிறார்.

அண்ணா திமுக திருவண்ணாமலையில் மிகப்பெரிய போராட்டம் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடத்துவதாக அறிவித்த காரணத்தால்  மக்களுக்கு கரும்பு வழங்க உத்தரவிட்டார்.  அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப், தாலிக்கு தங்கம் போன்றவைகள் கூட நிறுத்தப்பட்டு விட்டன. அப்போது சட்டம் ஒழுங்கு நன்கு சிறப்பாக இருந்தது.

தற்பொழுது தெருவுக்கு தெரு சட்ட விரோதமாக டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன மக்களை மதுவுக்கு அடிமையாக் கி எப்போது மயக்கத்தில் இருக்கும் நிலையை உருவாக்கி உள்ளனர் எனவே இந்த ஆட்சிக்கு பாடம் கற்பிக்க 2026 -இல் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர இடைத்தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெற வேண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி எப்போதுமே அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நாம் நிரூபிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பென் வாக்காளர்களும், 23 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top