Close
செப்டம்பர் 20, 2024 4:09 காலை

அதிமுக சார்பில் பெருந்துறையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

ஈரோடு

எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 -ஆவது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அந்த வகையில், பெருந்துறை தொகுதி அதிமுக சார்பில், பெருந்துறை நால்ரோடு பகுதியில் அமைக்கப்பட்ட எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள், மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

முன்னதாக பெருந்துறை, பங்களா வீதியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பெருந்துறை நகரின் முக்கிய வீதிகள் வழியாக பெருந்துறை நால்ரோடு பகுதிக்கு வந்தடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, ஒன்றிய செயலாளர்கள் அருள் ஜோதி (எ) செல்வராஜ், வைகை தம்பி (எ) ரஞ்சித் ராஜ், விஜயன் (எ) ராமசாமி, பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், துணைத்தலைவர் உமா மகேஸ்வரன், மாவட்ட அவைத்தலைவர் பொன்னுதுரை, ஜெகதீஷ், மாவட்ட இணைச் செயலாளர் மைனாவதி கந்தசாமி.

மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமா நல்லசாமி, யூனியன் கவுன்சிலர் ரொட்டி பழனிசாமி, அப்புகுட்டி (எ) வெங்கடாஜல பதி, முன்னாள் துணைத் தலைவர் பழனிசாமி, சாமிநாதன், வார்டு கவுன்சிலர்கள் வளர்மதி, புனிதா, கோமதி, குணசேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

பட விளக்கம் : பெருந்துறை தொகுதி அதிமுக சார்பில் எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்ஜிஆரின் 106 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமை யிலான அதிமுகவினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top