Close
செப்டம்பர் 19, 2024 8:50 காலை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிலைப்பாடு: பாஜக தலைவர் விரைவில் அறிவிப்பார்

ஈரோடு

ஈரோட்டியில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் அறிவிப்பார் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர்  முருகானந்தம் தெரிவித்தார்.

பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.  அதில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் மேலும்  கூறியதாவது:  பாஜக நாட்டில் 80 சதவீதத்துக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.

பாஜக தமிழகத்திலும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு உதாரணம் மொடக்குறிச்சி தொகுதியை பாஜக கைப்பற்றிய தாகும். பாஜக தேர்தலை கருத்தில் கொண்டு செயல்பட வில்லை.  அடுத்த தலைமுறை மற்றும் தேச வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.

இன்றைய கூட்டம் கூட மாவட்டத்தின் முக்கிய பிரச்னைகளை கண்டறியவும் அதை தீர்க்கவும் ஆலோசனை நடக்கிறது. ஓரிரு நாளில் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை அண்ணாமலை நடத்துகிறார். அதன் பிறகு தேர்தல் குறித்த நிலைப்பாட்டை அவர் அறிவிப்பார் இவ்வாறு அவர் கூறினார் கூட்டத்தில் மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி, மாவட்ட தலைவர் வேதானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top