Close
ஏப்ரல் 11, 2025 11:51 மணி

அந்தியூர் தொகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஈரோடு

அந்தியூர் தொகுதியில் நடைபெற்ற திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

முன்னாள் முதல்வரும், முன்னாள் கழக தலைவருமான கருணாநிதியின் நுாற்றாண்டு  விழா தொடக்கம்,  திமுக பவள விழா ஆண்டை முன்னிட்டு  உடன்பிறப்பாய் இணைவோம்
இயக்கம் மூலம், ஏப்ரல் 3 முதல் ஜூன் 3 வரை  திமுகவின்  உறுப்பினர் சேர்க்கை சிறப்பு  முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டம், அந்தியூர் தொகுதியில் நடந்த சிறப்பு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை, தொகுதி பொறுப்பாளர் பாரதி தொடக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நல்லசிவம், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top