Close
செப்டம்பர் 19, 2024 11:25 மணி

பொன்னமராவதியில் அரசு மருத்துவமனையில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் கள ஆய்வு

புதுக்கோட்டை

பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் கள ஆய்வு மேற்கொள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்

பொன்னமராவதியில் அரசு மருத்துவமனையில் அனைத் திந்திய மாதர் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் பொன்னமராவதி ஒன்றிய நிர்வாகிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

பொன்னமராவதி ஒன்றியத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் மதியரசி தலைமையில் நிர்வாகிகள் மணிமேகலை, லதா,சுபா, ராஜாமணி,ராதா ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் நிர்வாகிகள் கூறியதாவது: வலையப்பட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனை முன்பாக அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நோயாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோரின் சிரமங்களை போக்க வேண்டும்.

இந்த  மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், பணியாளர்கள், பாதுகாவலர் நியமித்து பொதுமக்களுக்கு முழுமையான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் பொன்னமராவதி அமரகண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடங்களை புதிதாக கட்டித்தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய மாதர் சங்கத்தின்நிர்வா கிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top