Close
செப்டம்பர் 20, 2024 1:34 காலை

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை

வாடிபட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

முன்னாள் முதல்வரும், முன்னாள் கழக தலைவருமான கருணாநிதியின் நுாற்றாண்டு தொடக்கம், கழக பவள விழா ஆண்டையொட்டி, உடன்பிறப்பாய் இணைவோம்இயக்கம் மூலம், புதிதாக  ஏப்ரல் 3 முதல் ஜூன் 3 வரை, சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த வேண்டுமென கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்

அதன்படி, மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் திருவேடகம் தனியார் மஹாலில் வாடிப்பட்டிதெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமையில்  நடைபெற்ற, முகாமை வெங்கடேசன் எம் எல் ஏ மற்றும் தொகுதி பார்வையாளர் சுப.த. சி. சம்பத் ஆகியோர் தொடங்கி வைத்து  பேசினர்.

 மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வழக்கறிஞர் முருகன், சி.பி.ஆர். சரவணன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜா என்ற பெரியகருப்பன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், வசந்தகோகிலாசரவணன், கார்த்திகா ஞானசேகரன், ரேகாவீரபாண்டி, ஊத்துக்குளி ராஜாராம், மேலக்கால் ராஜா, மாணவரணி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top