Close
செப்டம்பர் 20, 2024 5:37 காலை

அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி… அங்கீகாரம் அளித்த தேர்தல் ஆணையம்… அதிமுகவினர் கொண்டாட்டம்..

ஈரோடு

பெருந்துறையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுக நிர்வாகிகள்

கழகப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதைக் கொண்டாடும் வகையில், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பெருந்துறையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பெருந்துறை பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை ஆகிய இடங்களில் பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள் ஜோதி கே.செல்வராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் டி.வி.ரஞ்சித் ராஜ் ஆகியோரது தலைமையில்  நிர்வாகிகள்  பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் விஜயன், சி.பி.ராமசாமி, யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், துணை தலைவர் உமாமகேஸ்வரன், கவுன்சிலர் ரொட்டி பழனிசாமி, பேரூராட்சி செயலாளர்கள் கல்யாணசுந்தரம், கே.எம்.பழனிசாமி, சிவசுப்பிரமணியம், என்.கே.துரைசாமி, ஊராட்சி தலைவர்கள் கவிதா அன்பரசு, அர்ஜுனன், தங்கவேல்.

பேரூராட்சி கவுன்சிலர்கள் வளர்மதி செல்வராஜ், புனிதவதி, கோமதி, மோகனாம்பாள், அப்புகுட்டி (எ) வெங்கடாஜலபதி உமா நல்லசாமி, ரமேஷ், ஆண்ட முத்து, பழனிசாமி, ராமர், ஈஸ்வரமூர்த்தி, சாமிநாதன், டாஸ்மாக் தர்மராஜ், மண்டபம் ரவி, பி.சி.ஆர்.சிவக்குமார், எம்.ஜெயக்குமார், கே.சி.செல்வராஜ்,  தட்சிணாமூர்த்தி, கார்மணி, ஒச்சப்பன், ஜெயபிரகாஷ், தேவராஜ், ரகுநாதன், தமிழ், கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top