Close
செப்டம்பர் 20, 2024 4:00 காலை

மடியில் கனமில்லை என்றால்… வருமான வரி சோதனையை திமுகவினர் தடுப்பது ஏன்?

தமிழ்நாடு

தமாகா நிர்வாகி எம்.யுவராஜா

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு? குற்றம் செய்யவில்லை என்றால் திமுகவினர் வருமான வரி சோதனையை தடுப்பது ஏன்  என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் இளைஞரணி தலைவர் எம். யுவராஜா வெளியிட்ட அறிக்கை:

எதிர் கட்சியினர் தமிழக ஆளுநரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுவிலக்கு துறையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து எழுந்த புகாரை அடுத்து கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் உறவினர்கள், நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளச் சென்றனர்.

இந்த நிலையில், கரூரில் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை நடத்த வந்த அதிகாரிகளின் கார் கண்எம் யுவராஜாணாடிகளை திமுகவினர் உடைத்ததாகவும், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ள தாகவும் செய்திகள் வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் திமுகவினர் தடுப்பது ஏன்? குற்றம் செய்யவில்லை என்றால் அதிகாரி களை தடுக்க வேண்டிய அவசியம் ஏன்? திமுகவினர் சோதனை செய்ய விடாமல் தடுக்கும் போது தவறு இருப்பது போல வெளியில் தெரிகிறது.

கடந்த காலத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்கும் போது கூட அண்ணா அறிவாலயத்தில் தயாளு அம்மாளை சிபிஐ சோதனை நடத்தினார்கள். அப்போது கூட திமுகவினர் பெரிய அளவில் அராஜகத்தில் ஈடுபடவில்லை. தற்போது முன்னாள் அமைச்சர்கள் மீது வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது சட்டம் தன் கடமையை செய்கிறது என்று கூறினார்கள். அடுத்தவர்களுக்கு வந்தால் இனிக்கிறது தங்களுக்கு வந்தால் கசக்கிறதா?

இன்று செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடக்கும் போது திமுகவினர் அராஜகத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக் கொள்ளும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, வருமான வரித்துறை அதிகாரிகள் மீது திமுகவினர் நடத்திய அராஜக தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வி எழுப்புகிறது.

வருமான வரித்துறை துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை தங்களுக்கு வருமான வரி சோதனை குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை, அதனால் எங்களால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று கூறியிருப்பது வெட்கக்கேடானது.

அதிகாரிகள் வந்து சோதனை நடத்தும் போது திமுகவினருக்கு தெரிந்தது ஏன் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவில்லை? சோதனை நடைபெறும் இடத்தில் இவ்வளவு கூட்டம் சேர்ந்த போது அதை கலைக்க ஏன் காவல்துறை முற்படவில்லை? மொத்தத்தில் செந்தில் பாலாஜியின் சொத்துகள், ஆவணங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக காவல்துறை காலம் தாழ்த்தியதா? என்ற கேள்வி எழும்புகிறது.

இந்த வன்முறையில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் தாமாக முன்வந்து வன்முறையில் ஈடுபட்டவர் களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அரசாங்கத்தின் உச்சபட்ச அதிகாரத்தில் உள்ளவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?. எந்த ஒரு வன்முறையாலும், அராஜகத்தாலும் உண்மையை மூடி மறைக்க முடியாது. செந்தில் பாலாஜி நேர்மையானவர் என்றால் சட்டப்படி நீதிமன்றத்தை நாடி குற்றமற்றவர் என்று நிரூபியுங்கள் என்று அதில் யுவராஜா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top