Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் கையெழுத்தியக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மதிமுக சார்பில் நடைபெற்ற கையெழுத்தியக்கம்

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவி -யை பதவி  நீக்கம் செய்யுமாறு இந்திய குடியரசு தலைவரை கேட்டுக் கொள்ளும் வகையில் மறுமலர்ச்சி திமுக பொதுக்குழு தீர்மானப்படி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 23/6/2023 வெள்ளிக்கிழமை  புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் மாவட்ட அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.கே. கலியமூர்த்தி வகித்தார். கே.ஏ.ஆரோக்கியசாமி மாவட்ட அவை தலைவர், மூத்த வழக்கறிஞர் கா.சி. சிற்றரசு மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் எஸ்.ராஜா அதிமூலம், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆ.சுப்பையா, அ.முத்தையா, கே.ஏ. மதியழகன்,

புதுக்கோட்டை நகர செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.ஞானபிரகாசம், புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மறவப்பட்டி கே.பாண்டியன், கறம்பக்குடி ஒன்றிய செயலாளர் சேது. கலையரசன், கறம்பக்குடி பேரூர் செயலாளர் ச.கணேசன் மற்றும் மாவட்டக் கழக நகரக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தோழமைக் கட்சிகள் சார்பில் தி.மு.க நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள், திராவிடர் கழக நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், இந்திய கம்னியூனிஸ்ட் நிர்வாகிகள், ஐக்கிய பொதுவுடமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆளுநரை நீக்க கோரி கையெழுத்து செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top