Close
செப்டம்பர் 20, 2024 2:40 காலை

அதிமுக மட்டும் தான் மனிதநேயத்தோடு பணியாற்றக்கூடிய இயக்கம்: கே.ஏ. செங்கோட்டையன்

ஈரோடு

கோபிச்செட்டி பாளையத்தில் நடந்த அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறார், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக மட்டும் தான் மனிதநேயத்தோடு பணியாற்றக்கூடிய ஆற்றல்மிக்க  இயக்கமாகும் என்றார்  முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

அதிமுக சார்பில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையம் மாதேஸ்வரன் கோவில் வீதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கோபி நகரபொறுப்பாளர் களுடன் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:  அதிமுக தான் மக்களை நேசிக்கின்ற இயக்கம். தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக மட்டும் தான் மனிதநேயத்தோடு பணியாற்றக்கூடிய ஆற்றல்மிக்க  இயக்கமாகவும் திகழ்கிறது.

அனைவருக்கும் உதவி கரம் நீட்டி எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு உழைக்கக்கூடிய இயக்கமாக அதிமுக உள்ளது. அதனால்தான் கோடிக்கணக்கான தொண்டர்கள் அதிமுகவில் உள்ளனர்.

ஒரு சிலர் அனைத்து இயக்கத்திலும் இருப்பார்கள். பதவி பறிக்கப்பட்டால் ஓடி விடுவார்கள். மீண்டும் ஆட்சி வந்தால் வருவார்கள். அதிகாரம் இருக்கிறதோ இல்லையோ அதிமுகவை தாங்கி பிடிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார் கே.ஏ.செங்கோட்டையன்.

கூட்டத்தில்,  ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர்
கே.கே.கந்தவேல் முருகன், மாணவரணி ராமச்சந்திரன், கோபி நகராட்சி கவுன்சிலர்கள் பிரியோனி கணேஷ், முத்துரமணன், கோபி ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், பேரவை செயலாளர் விஜயகுமார், இளைஞரணி செயலாளர் விசுவநாதன், மகளிர் அணி தமிழ்ச்செல்வி மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top