Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

மணிப்பூர் கலவரம்… மெழுவர்த்தி ஏந்தி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்

மணிப்பூர் மாநிலத்தின் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் வி. முருகேசன் தலைமை வகித்தார்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை திவ்யநாதன், சிறுபான்மையினர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் இப்ராஹிம் பாபு, புதுக்கோட்டை வட்டாரத் தலைவர் சூர்யா பழனியப்பன், நகரத் தலைவர்கள் கண்ணன், பாரூக் ஜெய்லானி, நகர்மன்ற உறுப்பினர் ஜெ. ராஜா முகமது உள்பட திரளானோர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top