Close
செப்டம்பர் 20, 2024 1:39 காலை

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் தீரன் சின்னமலைக்கு நினைவுஅஞ்சலி

புதுக்கோட்டை

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வீரவணக்க கூட்டம்

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வீரவணக்க கூட்டம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டையில் உள்ள வீர சைவ பேரவை அலுவலகத்தில் மத்திய மண்டல செயலாளர் சரவண தேவா தலைமையில் நடைபெற்றது.

இதில், பார்க்கவ குல உடையார் சங்க மாநில செயலாளர் ஆனந்த் மாணிக்கம் அவர்கள் மாலை அணிவித்தார் யாதவ எழுச்சி பேரவை எம் சி கே சின்னத்தம்பி யாதவ் வீர சைவ பேரவை மாவட்ட தலைவர் நாராயணன் வீரசைவ பேரவை மாவட்ட செயலாளர் தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன்.

நாயுடு சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் வீர சைவ பேரவை செயல் தலைவர் ஜெயராஜ் மாவட்ட பொருளாளர் சதாசிவம் அனைத்து வெள்ளாளர் வேளாளர் சங்க பிரதிநிதிகள் சதாசிவம் பிள்ளை, கீரனூர் சக்திவேல் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட தலைவர் கே ஆர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

முன்னாள் ராணுவ வீரர் பாலையன் அனைவரையும் வரவேற்றார். நமது மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இராம சுரேஷ் வர்மன் நன்றி கூறினார்.

பார்க்கவ குல உடையார் சங்க மாவட்ட பொறுப்பாளர் ராமலிங்கம் நாயுடு சங்க மாவட்ட நிர்வாகிகள் தேவராஜ் நாயுடு ராகவன் நாயுடு வீரசைவ பேரவை தியாகராஜன் கொப்பனாப்பட்டி கண்ணன் தமிழ்நாடு முத்தரையர் சங்க நிர்வாகிகள் செல்ல விக்னேஷ் செல்வகுமார் பிரவீன் விமல் ஹரி ராமு புகழ் சபரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top