Close
செப்டம்பர் 19, 2024 11:04 மணி

வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித்தரக்கோரி விவசாயத் தொழிலாளர்சங்கம் ஆர்ப்பாட்டம். 

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயத்தொழிவாளர் சங்கத்தினர்

வீடு இல்லாத ஏழைகளுக்கு ரூ. 10 லட்சத்தில் வீடு கட்டித்தரக்கோரிஅகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பில் இலவச வீடு கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் கே.சக்திவேல் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி விதொச மாநில செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் மற்றும் நிர்வாகிகள் கே.சித்திரைவேல், எஸ்.நாராயணசாமி, கே.சாந்தி, கே.சேட்டுத்துரை, ஜி.ராஜேஷ், என்.குமரேசன் ஆர்.கவிதா திருப்பதி உள்ளிட்டோர் பேசினர்.
சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பில் இலவச வீடு கட்டித்தர வேண்டும் வேண்டும்.  தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை வேறு பணிகள், கட்டிட பணிகளுக்கு மடைமாற்றம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top