Close
செப்டம்பர் 19, 2024 11:16 மணி

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஈரோடு

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று ஈரோட்டில் இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் உற்சாகத்துடன் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூலை 11 -ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதிகளான ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை வரவேற்ற அதிமுகவினர் மாநிலம் முழுவதும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ஈரோட்டில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு தலைமையிலான அதிமுகவினர் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் எம்ஜிஆர், பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது கூடியிருந்த அதிமுகவின் மதுரையை மீட்ட எடப்பாடியார் வாழ்க, அதிமுகவை மீட்ட புரட்சித்தமிழர் வாழ்க என பல்வேறு முழக்கங்களை  எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, பெரியார் நகர் மனோகரன், வழக்கறிஞர் அணியின் மாவட்டத் தலைவர் துரை சக்திவேல், வார்டு செயலாளர் சந்தானம், போக்குவரத் துக்கழகம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top