புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்பி வரும் திரைப்பட நடிகை விஜயலட்சுமியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் புகார் மனு அளித்தனர்
கடந்த இரண்டு மூன்று நாட்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை திரைப்பட நடிகை விஜயலட்சுமி கூறிவந்தார். சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, ஆதாரங்களுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்பி வரும் நடிகை விஜயலட்சுமியை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் (செப்3) மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரியிடம் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
அதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சிறப்பாக சீமான் செயல்பட்டு வருகிறார். தற்பொழுது தேர்தல் நெருங்கும் நேரத்தில், இதுபோன்ற குற்றச்சாட்டை நடிகை விஜயலட்சுமி கூறி வருகிறார். அவருடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் விஜயலட்சுமி இது போன்ற பொய் புகார்களை கூறி வருவதாகவும், அவரை கைது செய்ய வேண்டுமென புகார் மனுவில் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.