Close
செப்டம்பர் 19, 2024 11:10 மணி

செப்.7 மறியலை விளக்கி சிபிஎம் கட்சி சார்பில் தீவிர பிரசாரம்

புதுக்கோட்டை

செப் 7 மறியல் போராட்டத்தை விளக்கி கீரனூர் கடைவீதியில் பிரசாரம் செய்த கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து செப் 7 -ல் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தை பொதுமக்களிடம் விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களின் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து வருகின்ற செப்.7 அன்று நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் பிரசாரத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர்

இந்தப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 6 இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக நடைபெறுகிறது. இந்த மறியல் போராட்டத்தை விளக்கி செப்.1 முதல் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்து போராட்ட விளக்கப் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இப்பிரசார இயக்கத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்  உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top