Close
செப்டம்பர் 20, 2024 1:21 காலை

மதுரையில் மதிமுக மாநாடு… புதுக்கோட்டை மாவட்டச்செயலர் அழைப்பு

புதுக்கோட்டை

மதிமுக மாவட்டச்செயலர் கலியமூர்த்தி

மதுரையில்  பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்த நாள் மாநாடு    புதுக்கோட்டை மாவட்ட மதிமுக செயலர் எஸ் கே கலியமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:                                    மதுரையில் செப்டம்பர் 15 -ஆம் தேதி   பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 -ஆவது பிறந்தநாள் விழா மாநாடு     கழகப் பொதுச் செயலாளர்  வைகோ.எம்.பி .அவர்களின் தலைமையில்  நடக்கின்றது

இந்தியாவே  திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது நமது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 143 வாகனங்கள் வரிசை எண்களுடன் செல்கின்றன.

கழக உடன்பிறப்புகள், மதிமுக   நிர்வாகிகள், பொறுப்பாளர் கள், தொண்டர்கள்  மாநாட்டிற்கு குடும்பத்துடன் திரளாக வருகை தந்து மாநாட்டில் விருப்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும்   புதுக்கோட்டை மாவட்டத்தின் பெயரை தலை நிமிரச்செய்யும் வகையில் மாநாட்டின் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

புதுக்கோட்டையில் செப்டம்பர் 15 -ஆம் தேதி காலை 10 மணி பேரறிஞர்  அண்ணா அவர்களின் பிறந்தநா முன்னிட்டு அண்ணா அவர்களின்  திருஉருவச் சிலைக்கு  நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின் அங்கு இருந்து மதுரையில் நடக்கும் மாநாட்டிற்கு பயணிக்க உள்ளதாகவும் அதில் கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top