Close
அக்டோபர் 6, 2024 10:55 காலை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் நினைவு நாள்

புதுக்கோட்டை

தஞ்சையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் 46வது நினைவு நாள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் 46 வது ஆண்டுநினைவு நாள் நிகழ்ச்சி கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் மாநகர குழு சார்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் என்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னைபாண்டியன் தியாகி என். வெங்கடாஜலத்தை  நினைவுகூர்ந்து பேசியதாவது:

நாடு விடுதலை பெற்ற பிறகும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பண்ணை,ஜமீன், நில உடமை கொடுமைகள் நிறைந்திருந்த காலத்தில்,பட்டியலின, ஒடுக்கப்பட்ட,ஏழை எளிய மக்கள் தோளில் துண்ட அணியவும், காலில் செருப்பு அணிந்து நடக்கவும், பொது தெருக்களில் நடமாட முடியாத சூழ்நிலையும், பொது குளங்கள், கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியாத சூழ்நிலையும் கடுமையான நிலவி வந்தது.

.இந்த நேரத்தில் கீழ தஞ்சையில் பி.எஸ்.சீனிவாசராவ் தலைமையிலும், பட்டுக்கோட்டை பகுதியில் வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவான் ஓடை சிவராமன்,ஆம்லாபட்டு ஆறுமுகம் ஆகியோரின் தலைமையிலும் கடுமையான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

இந்நேரத்தில்,மேற்கு தஞ்சை மாவட்ட மக்களின் சுயமரியா தைக்காகவும், தீண்டாம கொடுமைகளுக்கு முடிவு கட்டவும், ராயமுண்டான் பட்டியில் வசித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்  என். வெங்கடாஜலம் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைகளையும், சுயமரியாதை மற்றும் அடிப்படை உரிமைகளையும் பெற்றுத் தந்தார்.

இதைகாண சகிக்காத நிலபிரபுத்துவசக்திகள் அவரை கடந்த 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 -ஆம் தேதி இரவு ராயமுண்டான்பட்டி கிராமத்திற்கு ரயிலில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்றவர் காணாமல் போனார் .இன்னமும் அவர் காவல் நிலைய பதிவேட்டில் காணாமல் போனவர் பட்டியலில் உள்ளார் என்பது வேதனைக்குரிய விஷயம்.

அவரது காலத்தில் நிலவி வந்த வர்ணாசிரம, நில உடமை, சாதிய ஒடுக்கு முறைகள் இன்னமும் தமிழ்நாட்டில் உள்ளது .பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகப் படுத்தப்பட்டு வருகிறது, பட்டியல் இன மக்கள் இன்னமும் கொடுமைப்படுத்தப் பட்டு வருகின்றனர்.

சாதிய ஆணவ படுகொலைகள் அவ்வப்போது நடந்தேறி வருகின்றன இவைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்ட உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க தியாகி வெங்கடாஜலம் பெயரால் உறுதி ஏற்போம் என்று உரையாற்றினார்.

நிகழ்வில் சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார், ஆர்.கலைச்செல்வி, என்.சிவகுரு,ந.குருசாமி, என்.சரவணன், இ.வசந்தி,வி. கரிகாலன், சி.ராஜன்,ஏ.அப்துல் நசீர், எம்.கோஸ்கனி, எம்.ராஜன், தஞ்சை மாமன்ற 35 -ஆவது வார்டு உறுப்பினர் எம்.வைஜயந்திமாலா, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு,

ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை .மதிவாணன், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன், தமிழ் தேச மக்கள் முன்னணி ஆலம்கான், பேராசிரியர் வெ.சுகுமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எழுத்தாளர் களப்பிரன்,

அறிவியல் இயக்க நிர்வாகி எல்.முருகன்,எல்ஐசி ஊழியர் சங்க முன்னாள் தலைவர் ஆர். புண்ணியமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, மருத்துவ கல்லூரி சிபிஐஎம்செயலாளர் ஏ.ராஜா, பாலாஜி நகர் ஏ.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்த்து மக்களை பிரித்து வைத்து இழிவு படுத்தி வரும் நில உடமைக்கு எதிராக, தஞ்சை மாவட்டத்தில் இன்னமும் நிலவி வரும் சாதிய சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக ,மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்னைகளுக்காக, பெண்களுக்கு எதிரான அனைத்து பாலியல் வன்கொடுமைகளை ஒழித்திட,சிறுபான்மை மக்கள் நலன் காத்திட,

நெற்களஞ்சியம் டெல்டாவின் உயிர்நாடியான விவசாயத்தை பாதுகாக்க, விவசாயிகள்,விவசாய தொழிலாளர்கள் நலன் காத்திட, தமிழ்நாட்டில் இன்னமும் நிலவில் வருகின்ற வர்ணாசிரம கொள்கை , நில உடமை சாதிய ஒடுக்கு முறைகளை முற்றிலுமாக முறியடிக்க, சாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகி என்.வெங்கடாஜலம் 46வது நினைவு நாளில் உறுதி ஏற்போம் என உறுதி ஏற்கப்பட்டது. முன்னதாக தியாகி என். வெங்கடாஜலம் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது .

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலை, கணபதி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தியாகி என். வெங்கடாசலம் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் தலைமையில் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர,மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top