Close
செப்டம்பர் 19, 2024 11:05 மணி

கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து திமுக சார்பில் வாகனப் பேரணி

ஈரோடு

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது

கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

பேரணியை டெல்லி சிறப்பு பிரதிநிதியும்,கழக விவசாய அணி செயலாளருமான ஏ. கே. எஸ். விஜயன் தொடக்கி வைத்தார். மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி வரவேற்றார். இதில் 200 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் கலந்து கொண்டன.

ஈரோடு
பேரணியை டெல்லி சிறப்பு பிரதிநிதியும்,கழக விவசாய அணி செயலாள ருமான ஏ. கே. எஸ். விஜயன் தொடக்கி வைத்தார்

இதில் கழக துணை பொது செயலாளர் அந்தியூர் ப. செல்வராஜ், மாநில விவசாய அணி இணை செயலாளர்கள் எல்.பி. தர்மலிங்கம், குறிஞ்சி சிவக்குமார், மாநில நிர்வாகி சிந்து ரவிச்சந்திரன் வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம், அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ. ஜி. வெங்கடாச்சலம், வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சம்பத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top