Close
அக்டோபர் 6, 2024 11:40 காலை

திருமயத்தில் அதிமுக நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள்

புதுக்கோட்டை

மக்கள்திலகம் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானம்

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 107 -ஆவது பிறந்தநாள் விழா திருமயத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திருமயம் ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்றசெயலர் கே.லெட்சுமணன்(எ)மணி தலைமையில்,  அதிமுக வடக்கு ஒன்றிய செயலர் பிஎல்ஆர். பழனிவேலு, தெற்கு ஒன்றியச்செயலர் ஏஎல். ராமு ஆகியோர் முன்னிலை யில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது.

இதில், மகளிரணி நிர்வாகி பி.மாரிக்கண்ணு, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஆசைத்தம்பி, பேரையூர் முன்னாள் ஊராட்சித்தலைவர் ராமன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலர்ஏ.மோகன், நெய்க்கோணம் ஊராட்சித் தலைவர் பெரியசாமி, ஒன்றிய இளைஞரணி நிர்வாகி அரசந்தம்பட்டி லெட்சுமணராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் ஊனையூர் சுப்பிரமணியன், கோட்டை வெங்கிட்டு,

புதுக்கோட்டை
எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மரியாதை செய்த திருமயம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள்

தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலர் மூங்கித்தாம்பட்டி அழகப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மணவாளங்கரை ஏகராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் விஸ்வேஸ்வரன், புலிவலம் முன்னாள் ஊராட்சித்தலைவர் வி. பெருமாள், ஒன்றிய மகளிரணி செயலர் எஸ். சித்ரா, மாவட்ட இளைஞரணி இணைச்செயலர் கே. இளங்குமரன்(எ) குமார், கண்ணூர் சி.தனுஷ்கோடி, எஸ். ராமையா, முகமதுஅப்துல்லா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை
எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் நடைபெற்ற அன்னதானம்

அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற அன்னதானத்தில் திரளான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்: திமுகவைச் சேர்ந்த குழிபிறை வின்மணி, அமமுக வைச்சேர்ந்த ராங்கியம் மகாலிங்கம் ஆகியோர் அதிமுகவின் இணைந்தனர். இவர்களுக்கு தெற்கு ஒன்றியச் செயலர்  ஏஎல். ராமு, அதிமுக வடக்கு ஒன்றிய செயலர் பிஎல்ஆர்எம். பழனியப்பன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top