மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர், முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர், சிஐடியு முன்னாள் மாவட்டத் தலைவர் தோழர் ப.சண்முகம் அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி பொதுக்கூட்டம் சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை காமராஜபுரத்தில் நடைபெற்ற புகழஞ்சலி பொதுக்கூட்டத்திற்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) புதுக்கோட்டை மாநகர ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.ரகுமான் தலைமை வகித்தார். தோழர் ப.சண்முகத்தின் உருவப்படத்தை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினருமான எம்.சின்னதுரை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்;. தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் ப.சண்முகம் அவர்களின் தியாக வாழ்வை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.
சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் மலைவிளைப்பாசி, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, மாநிலக்குழு உறுப்பினர் பி.சத்தியநாராயணன், மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சி.மாரிக்கண்ணு, ஆர்.மணிமாறன், கே.நடராஜன், க.ரெத்தினவேலு, ஏ.முகமது கனி ஆகியோர் பேசினர்.
முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் முகமது சேட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், சு.மதியழகன், கி.ஜெயபாலன், மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், ப.சண்முகம் அவர்கள் மகன் ஸ்டாலின், சமூக ஆர்வலர்கள் மணிகண்டன், பீர்முகமது உள்ளிட்டோரும் புகழஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.வீராச்சாமி வரவேற்க, மாவட்ட துணைச் செயலாளர் மு.வெ.சரவணன் நன்றி கூறினார். நிகழ்வில் தோழர் ப.சண்முகம் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.