காமராஜரை பற்றி தவறாக பேசிய திருச்சி சிவா வருத்தம் தெரிவிக்க வேண்டும் – தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பு
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் விடுத்துள்ள அறிக்கையில் பெருந்தலைவர் காமராஜரை பற்றி தவறான கருத்துக்களை பதிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்களை தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.
திருச்சி சிவா பேசிய கருத்தை விவாத பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தமிழக முதல்வர் அவர்கள் தனது அறிக்கையில் கூறி இருக்கின்றார்கள். ஏன் தமிழக முதல்வர் அவர்கள் திருச்சி சிவா பெருந்தலைவர் காமராஜரை பற்றி பேசியது தவறு என்று சுட்டிக்காட்டி திருச்சி சிவாவை வருத்தம் தெரிவிக்க சொல்லவில்லை ?
காலம் காலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு சில நபர்கள் காமராஜரை பற்றி தவறான கருத்துக்களை பேசி வருகிறார்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கூட தேர்தல் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத போதிலும் திராவிட முன்னேற்ற கழகம் தமிழக முழுவதும் வெற்றி பெற்றது என்ற ஆணவத்தில் இதுபோன்று காமராஜரை பற்றி இழிவாக பேசி வருகின்றார்களா?
பெருந்தலைவர் காமராஜரை பற்றிய தவறான கருத்துக்களை பதிவு செய்த திருச்சி சிவா அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




