Close
செப்டம்பர் 19, 2024 11:22 மணி

ஈரோட்டில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

ஈரோடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செய்த அதிமுக நிர்வாகிகள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஈரோட்டில் கொண்டாடப்பட்டது.

ஈரோட்டில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 -ஆவது பிறந்த நாள், பெரிய சேமூர் பகுதியில், ஈரோடு மாநகர் மாவட்ட அம்மா பேரவை மற்றும் ஈரோடு மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில் ஜெயலலிதா உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் வீரக்குமார் தலைமை வகித்தார். மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் கே.என். நந்தகோபால் முன்னிலை வகித்தார்.

இதில், அதிமுக நிர்வாகிகள் மாரிமுத்து, ஜெயப்பிரகாஷ், ஆனந்தன், அம்மா பேரவை செந்தில், பாசறை ரமேஷ், முருகன், வைரம், கோபால்சாமி, ஹரிகுமார், நாகராஜ், செல்வராஜ், குமார், தர்மலிங்கம், குப்புசாமி, ராமசாமி, சேகர், பிரியா, எடின் லோகநாதன்.

ராஜ் ராஜாராம், குமரேசன், வாத்தியார் பழனிச்சாமி, லட்சுமணன், ராஜசேகர், கார்த்தி, பாலாஜி, கார்த்திகேயன், ஆட்டோ மாது, டிவி ரவி ,ஆர். சுரேஷ், கே. கிருஷ்ணமூர்த்தி, கருணாகரன், ராசு (எ) சுந்தர்ராஜன், அபூபக்கர், சரவணன், குணசேகரன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அப்பகுதி பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top