Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

புதுகை நகராட்சி பகுதியில் திமுக எம்பி அப்துல்லா நேரில் ஆய்வு

புதுக்கோட்டை

மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்எம். அப்துல்லா

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மாநிலங்களவை திமுக  எம்பி அப்துல்லா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பல்வேறு அடிப்படை வசதிகள் பற்றாக்குறை இருந்து வருகிறது.மேலும் அனைத்து பகுதிகளிலும் சாலை வசதிகள் குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

புதுக்கோட்டையில் உள்ள 42 வார்டுகளிலும்  சாலை வசதி மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை பிரச்சனை இருந்து வருவதால், திமுக மாநிலங்களவை எம்பி அப்துல்லா,  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் போதெல்லாம் நகராட்சி மற்றும் பல்வேறு  பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளுடன்  நேரில்  சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் என்னென்ன குறைகள் இருக்கிறது என்பதை  கேட்டு வருகிறார்.

அதேபோல், திங்கள்கிழமை புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட ராஜகோபாலபுரம் 4 -ஆம் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நகராட்சி ஆணையர் நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று பொதுமக்களிடம் அடிப்படைப் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்காக, பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வுகளை எம்பி  அப்துல்லா மேற்கொண்டார். இந்த நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top