Close
செப்டம்பர் 19, 2024 11:11 மணி

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அரசமலை ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம்

பொன்னமராவதி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அரசமலையில் நடந்த மருத்துவமுகாம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அரசமலை ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசமலை கே.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு பனையபட்டி நலம் கிளினிக், புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும் தமிழக முன்னாள் வீட்டுவசதி வாரியத் தலைவருமான பிகே.வைரமுத்து அவர்களின் வழிகாட்டுதலில்படி முத்துமீனாட்சி நிர்வாக இயக்குனர் பெரியசாமி தலைமையில் மற்றும் முகாம் ஏற்பாட்டு குழு பொறுப்பாளர் பொன்னமராவதி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அரசமலைமுருகேசன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் குழிபிறை பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் அப்பகுதி பொது மக்களுக்கு இருதய பரிசோதனை, மூட்டு வலி, இடுப்புவலி மற்றும் பொது மருத்துவ பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.

இம்முகாமில் பொன்னமராவதி கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி கண்ணப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் கல்லம்பட்டி முத்துக்காளை,தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மாரிமுத்து,நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட சிறுபான்மை யினர் பிரிவு நிஸார் அலி, மாவட்ட மாணவரணி செயலாளர் ஆலவயல் சரவணன், மாவட்ட எம்ஜிஆர் அணி நெடுஞ்செழியன், ஒன்றிய கவுன்சிலர் நல்லூர் பழனியப்பன், நெறிஞ்சிகுடி ஊராட்சித்தலைவர் வைரமாணிக்கம், மருத்துவமனையின் செயல் அலுவலர் பிரேம்குமார் ராஜன், பிஆர்ஓ தலைவர் வினோத்குமார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top