Close
செப்டம்பர் 20, 2024 1:43 காலை

புதுகை முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமரனின் 10-ஆம் ஆண்டு நினைவு நாள்: கட்சி நிர்வாகிகள் மலரஞ்சலி

புதுக்கோட்டை

மறைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள்  எம்எல்ஏ முத்துக்குமரனின் 10 -ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி (ஏப்ரல் 1)  அவர் மரணமடைந்த இடத்தில் உள்ள  நினைவிடத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டை  மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் சொக்கநாதன்பட்டியில் நேரிட்ட சாலை விபத்தில் மறைந்த எம்எல்ஏ   முத்துக்குமரன் நினைவிடத்தில் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மு.மாதவன் தலைமையில்  நடைபெற்றது. இதில்,  மறைந்த தோழர் முத்துக்குமரனின் மனைவி சுசீலா மற்றும் குழந்தைகள்,  உறவினர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. ஆர். தர்மராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் த.செங்கோடன், மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் எஸ். சி. சோமையா, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர் முருகானந்தம்.

மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆர் சொர்ணகுமார்,
என். ஆர். ஜீவானந்தம், எழுத்தாளர் மணிமொழி, ஒன்றிய செயலாளர் என். விஜயரங்கன்,  ஒன்றிய பொருளாளர்
எம். மீராமுகைதீன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஏ நாகராஜ், சி ஆனந்தன், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கே ராஜேந்திரன், நகர செயலாளர் என். ஏ. அப்துல் ரகுமான், ஜாபர் அலி,  திமுக அன்னவாசல் நகரச் செயலாளர் அக்பர் அலி மற்றும் கட்சியினர் திரளாக பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top