Close
செப்டம்பர் 19, 2024 11:05 மணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் க. செல்வராஜ் மறைவுக்கு பல்வேறு கட்சியினர் இரங்கல்

புதுக்கோட்டை

மறைந்த சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் க. செல்வரராஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினராக  பணியாற்றி வந்த தோழர் க.செல்வராஜ்(56) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். சனிக்கிழமை நடைபெற்ற  அவரது இறுதிச் சடங்கில்  அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி  செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றி  மாவட்டத்தில் இயக்கத்தை வளர்க்க பாடுபட்ட களப்போராளி யாகவும் சிஐடியு தொழிற்சங்கத்தில் மாவட்ட செயலாளராக, தலைவராக மாநிலக்குழு உறுப்பினராக பல ஆண்டு காலம் பணியாற்றி உழைப்பாளி மக்களின் நம்பிக்கைக்கு பாத்தி ரமாகத் திகழ்ந்தவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளராக பணியாற்றியவர். .
35 ஆண்டுகளுக்கு மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சிப் பணியாற்றி வந்த   தோழர் க.செல்வராஜ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில்  வெள்ளிக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு, கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிஐடியு மாநில செயலாளர் எம்.ஹாடா ஹெலன், அறந்தாங்கி ஒன்றிய குழுத்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன்.
புதுக்கோட்டை
மறைந்த சிபிஎம் கட்சி நிர்வாகி க. செல்வராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ சின்னத்துரை. உடன் மாவட்ட செயலர் எஸ். கவிவர்மன், நிர்வாகி மதியழகன் உள்ளிட்டோர்.
சிபிஎம் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு மற்றும் மூத்த தோழர்கள்  உறுப்பினர்கள் எம்.ஜியாவுதீன். ஏ.ராமையன் ஏ.ஸ்ரீதர், என்.பொன்னி, கே.சண்முகம், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த.அன்பழகன், எஸ்.மதியழகன் துரை.நாராய ணன், எஸ்.ஜனார்ததனன்.
டி.சலோமி, தென்றல் கருப்பையா, எல்.வடிவேல், வி.ரத்தினவேல் ஜி.பன்னீர் செல்வம், எஸ்.மணிவ ண்ணன், பி.வீரமுத்து, டி.லட்சாதிபதி, எம்.ஆர்.சுப்பையா, கரு.ராமநாதன், நெருப்பு முருகேஷ் கே. தங்கராஜ், ஆர்.காமராஜ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் எம்.சின்னத்துரைஎம்எல்ஏ., மாவட்ட செயலாளர் எஸ். கவிவர்மன் உள்ளிட்டோர் இரங்கல் உரை நிகழ்த்தினர். செல்வராஜுக்கு சந்திரா என்ற மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
கே பாலகிருஷ்ணன்,  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இரங்கல்:
தோழரின்  மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சிபிஎம் மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி, சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர்ராஜன்,  பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், ஐ.வி.நாகராஜன், ஆர்.சிங்காரவேல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top