Close
செப்டம்பர் 20, 2024 1:22 காலை

நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழிகாட்டி கையேடு வழங்கல்

சென்னை

சென்னையில் நடந்த நகர்புற உள்ளாட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என். நேரு

மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி கையேடு வெளியிடும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தது சிறப்புரையாற்றியது டன் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் அடங்கிய பயிற்சி கையேட்டினை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த புதுகை நகர்மன்ற தலைவர் திலகவதிசெந்தில்

இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பி.பொன்னையா  ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் புதுக்கோட்டை நகர் மன்றத் தலைவர் திலகவதி செந்தில்  உள்பட திரளானோர் கலந்து கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top