Close
செப்டம்பர் 19, 2024 11:11 மணி

அம்பேத்கர் பிறந்தநாள்: தமுஎகச சார்பில் மரியாதை

புதுக்கோட்டை

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது உருவச்சிலைக்கு மரியாதை செய்த தமுஎகச நிர்வாகிகள்

பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில்(ஏப்.14) புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு புதுக்கோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்  சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், கவிஞர் நா. முத்துநிலவன், ராசி. பன்னீர்செல்வம், சு. மதியழகன், சு. பீர் முகமது, எஸ். டி. பாலகிருஷ்ணன், உஷா நந்தினி, புதுகைப்புதல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. சமத்துவ சமுதாயம் மலரச்செய்யும் நோக்கில் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு  தமுஎகச சார்பில் நன்றி தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top