Close
செப்டம்பர் 19, 2024 11:07 மணி

தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படி கையாள்வது: கட்சியினருடன் கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆலோசனை

புதுக்கோட்டை

சிபிஎம் கட்சியின் கந்தர்வகோட்டைதொகுதி பேரவை கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ சின்னத்துரை

கந்தர்வகோட்டை தொகுதியில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படி முறையாக கையாள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

கட்சியின் முன்னணி ஊழியர்களுக்கான சிறப்புப்பேரவைக்கு சட்டமன்ற தொகுதிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.ராமையன் தலைமை வகித்தார்.

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், த.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பொன்னுச்சாமி, டி.சலோமி உள்ளிட்டோர் பேசினர்.

கந்தர்வகோட்டை
சிபிஎம் பேரவைக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்

பேரவையில், கந்தர்வகோட்டை தொகுதிக்குள் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகளை எப்படி தீர்த்து வைப்பது, சாதாரண ஏழை, எளிய மக்களளுக்கு அரசின் நலத்திட்டங் களை எப்படி கொண்டு செல்வது, சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படி முறையாக கையாள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பேரவையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்மும், சு.மதியழகன், ஒன்றிய செயலாளர்கள் எம்.வீரமுத்து, எம்.ஆர்.சுப்பையா, எஸ்.கலைச்செல்வன், ஆர்.காமராஜ் உள்ளிட்டோர் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் வரவேற்றார். தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top