Close
செப்டம்பர் 20, 2024 2:55 காலை

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

சிஐடியு

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தினர்

தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேல்நிலைத்தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர் கள், தூய்மைக் காவலர்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத் (சிஐடியு) தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைத் தலைவர்கள் சி.அன்புமணவாளன், எஸ்.யாசிந்த், துணைச் செயலாளர்கள் சி.மாரிக்கண்ணு, ரெத்தினவேல் உள்ளிட்டடோர் பேசினர்.

மேல்நிலைத்தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர் கள், தூய்மைக் காவலர்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியா ளர்களுக்கு 31 விழுக்காடு அகவிலைப்படியை இணைத்து புதிய ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

தூய்மைக் காவலர்களுக்கு மகளிர் குழு மூலம் சம்பளம் வழங்குவதைத் தவிர்த்து ஊராட்சி நிர்வாகம் மூலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத் தில் எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top