Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு இலட்சினை வெளியீடு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் வெளியிடப் பட்ட இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு குறித்த இலச்சினை

ஆக.25-27-ல் நடைபெறும் இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு குறித்த  இலட்சினை வெளியிடப்பட்டது.

வருகிற ஆகஸ்ட் 25-27 தேதிகளில் திருவாரூரில் நடைபெற உள்ள இந்திய மாணவர் சங்கத்தின் 26-ஆவது மாநில மாநாட்டு இலட்சினை வெளியிடப்பட்டது.

இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். திருவாரூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டுப் பணிகள் குறித்து மாநில செயலாளர் வி.மாரியப்பன் விளக்கவுரையாற்றினார்.

கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர்கள் நிருபன் சக்கரவர்த்தி, சத்யா, மாநில துணைச் செயலாளர்கள் ஆறு.பிரகாஷ், ஜி.அரவிந்தசாமி உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஆகஸ்ட் 25, 26, 27 தேதிகளில் திருவாரூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டையொட்டி நீட் தேர்வு மற்றும் கியூட் தேர்வுகளுக்கு எதிரான மாணவர்களின் பேரணியும் பொதுக்கூட்டமும் பிரமாண்டமான அளவில் நடத்துவது என மாநிலக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. மேலும், மாநில மாநாட்டுக்கான இலட்சினையும் மாநிலக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. முன்னதாக மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்னன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஏ.சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top