Close
செப்டம்பர் 20, 2024 4:09 காலை

மத்திய அரசைக்கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் ஆக.5 ல் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

மத்திய அரசைக்கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்ட அறிவிப்பு

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் வெள்ளிக்கிமை கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  புதுக்கோட்டை. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி.வடக்கு / தெற்கு நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

மத்திய பா ஜ க அரசின் தவறான பொருளாதார கொள்கை , பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அமலாக்கத்துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் எதேச்சாதிகார போக்கு, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தற்போதைய ஜிஎஸ்டி வரிவிதிப்பு , பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரலை தடை செய்தல் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வு.

இது போன்ற  ஜனநாயக மக்கள் விரோத போக்கை கண்டித்து புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு 5.8.2022 காலை 10 மணியளவில் கண்டன முற்றுகை போராட்டம் மாவட்ட தலைவர்கள்  வி.முருகேசன் மற்றும் ராம.சுப்புராம் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் பேரியக்க மாநில மாவட்ட நகர வட்டார நிர்வாகிகள் மற்றும் தேசிய தோழர்கள் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பிட வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top