Close
செப்டம்பர் 19, 2024 7:16 மணி

மதுரையில் அமைச்சர் மீது பாஜகவினர் செருப்பு வீசிய விவகாரம்: ஈவிகேஎஸ். இளங்கோவன் விமர்சனம்

ஈரோடு

ஈரோட்டில் பேசிய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன்

மதுரையில் அமைச்சர் மீது பாஜகவினர் செருப்பு வீசிய விவகாரத்தில் இருந்தே தெரிகிறது பாஜக என்றாலே என்ன அர்த்தம் என்பது அவர்கள் வீசிய பொருளிலிருந்து தெரிகிறது என்றார்   முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ. வி.கே.எஸ்.இளங்கோவன்.

ஈரோட்டில் அவர் மேலும் பேசியதாவது: தமிழகத்தில் இன்னும் மின் கட்டணம் அதிக படுத்தப்படவில்லை. அதிகரிக்கப்படும்  என்று  அமைச்சர் சொல்லியிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசுதான் மோடி அரசுதான்.

தமிழக அரசை மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த ஓராண்டாக வற்புறுத்தி வருகிறது. ஆனால் அவர்கள் எவ்வளவு ஏற்றப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. அது மக்களை பாதிக்காத வகையில் உயர்வு இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசி இருப்பதாக சொல்கின்றார்கள்.ஆனால் ரஜினியின் அடுத்த படத்திற்கு விளம்பரத்திற்கு தயாராகி வருவது தெரியவந்துள்ளது. ரஜினியை பாஜகவினர் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன.

அவர் அரசியலுக்கு வந்தால் தானே முன்னிலைப்படுத்த வேண்டும் அவர் இருபது முப்பது வருடங்களாக ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று கூறுகிறார். எம்ஜிஆர் ஆட்சியை தர போகின்றேன் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு ஜகா வாங்குவதுதான் அவரது வழக்கமானதுதான் என்றார் ஈவிகேஎஸ். இளங்கோவன்து உள்ளார்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top