Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

ஈரோடு இடைத்தேர்தல்… ஓட்டுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க வேண்டுமென மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் அதிகாரி மற்றும் ஈரோடு மாநகராட்சிஆணையர். சிவக்குமார் ஆகியோருக்கு மறு மலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் வே.ஈஸ்வரன் அளித்துள்ள மனு:

தமிழகத்திம் கடந்த பல இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் வெளிப்படையாக ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் இதற்கு முன்பும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள்ள வில்லை.

இதற்காக மறுமயர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பாக பல மாநிலங்களிம் கையெழுத்து இயக்கம் நடத்தினோம் . “சுற்றுச்சூழல் போராளி” மேத்தா பட்கர் அவர்களிடமும் கையெழுத்து பெற்றுள்ளோம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் வெளிப் படையாக பணமும் பொருளும் கொடுக்கப்பட்டதால் கோவை மாநகராட்சி தேர்தலை இரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன்.

தேர்தலில் ஜனநாயகத்தை காப்பாற்றும் பொறுப்பும், கடமையும் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. இந்ததேர்தலி லும் ஒட்டுக்கு பணம் பொருள் கொடுக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இதனை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

வெளி மாநில காவல்துறை அதிகாரிகளையும், காவலர்களை யும் தேர்தல் ஆணையம் தேர்தல்கண்காணிப்பாளராகவும், பாதுகாப்பாளர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும்.

ஈரோடு

இதனையும் மீறி பணமும் பொருளும் வாக்குக்கு கொடுக்கப் பட்டால் பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தலை நிறுத்தி விட வேண்டும். நியாயமாக தேர்தல் நடக்கும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலை தள்ளி வைக்கலாம்.

அனைவருக்கும் தெரிந்து ஊர் உலகம் அறிய வெளிப்படை யாகவே நடக்கும் இந்த ஜனநாயகப் படுகொலையை தேர்தல் ஆணையம் வேடிக்கை மட்டும் பார்க்கமுடியும் எனில் இந்த தேர்தல் ஆணையம் எதற்காக? இந்த அரசியல் அமைப்பு எதற்காக? இந்திய அரசு இயந்திரம் எதற்காக? .

இந்த ஈரோடு இடைத்தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்துகின்ற தேர்தலாக அமைய வேண்டும். எந்த அரசியல் இயக்கமும் ஓட்டுக்கு பணம் வழங்க இயலாத சூழலை ஏற்படுத்த வேண்டும். இதில் தேர்தல் ஆணையம் தீவிரமான நேர்மையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் .

இந்த தேர்தலில் ஒட்டுக்கு பணம் கொடுத்தால் இதனை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தின் மீதும் வழக்கு தொடர உள்ளதாகவும்  அந்த மனுவில்  மறுமலர்ச்சி இயக்க தலைவர் வே. ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top