Close
செப்டம்பர் 20, 2024 2:51 காலை

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்: அமமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி அமமுக வேட்பாளர் சிவ பிரஷாந்த்

ஈரோடு கிழக்கு மாவட்ட அமமுக  செயலாளர் பொறுப்பு வகித்து வரும் ஏ.எம். சிவபிரஷாந்த்(29)  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில்  போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலர் டிடிவி. தினகரன் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாநகர் மாவட்ட  அம்மா மக்கள் முன்னேற்றத் கழகத்தின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவராக 2017 முதல் பணியாற்றியுள்ளார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டு இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை என அணி இரண்டாக பிரிந்தபொழுது மாவட்ட இளைஞர் பாசறை தலைவராக பொறுப்பேற்றார்.

அதனைத் தொடந்து 2020 -ஆம் ஆண்டு மாநில தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2022 -ஆம் ஆண்டு ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்டு திறம்பட செயல் ஆற்றி வருகிறார்.

கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர் மாவட்ட அளவில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த போட்டியாளர், ஆட்டநாயகன் ,கல்லூரி அளவில் நடந்த போட்டிகளில் சிறந்த கேப்டன் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இவர் தனது குடும்பத்துடன்  58/1, டவர்லைன் காலனி, செல்வம் நகர், வீரப்பன் சத்திரம், குமிலன்குட்டை ஈரோடு-638011 என்ற முகவரியில் வசித்து வருகிறார். அலைபேசி – 9003344844.  இவரது தந்தை   சம்பத் (எ) முத்துக்குமரன்- தாயார் சிவசக்தி ஆகியோர் வழக்கறிஞராக உள்ளனர்.மனைவி  கீர்த்தனா மருத்துவராக உள்ளார். இவருக்கு   ஒரு பெண்குழந்தை  உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top