Close
அக்டோபர் 5, 2024 6:48 மணி

திருமயத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

புதுக்கோட்டை

திருமயத்தில் வட்டாட்சியர் புவியரசன் தலைமையில் நடைபெற்ற வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, 14 -ஆவது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை, வட்டாட்சியர் எஸ். புவியரசன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் பேருந்து நிலையம் உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலக வளாகத்தினை சென்றடைந்தது.

இதில் பங்கேற்ற கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் 120-க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு  பிரசாரம் செய்தபடி சென்றனர்.

புதுக்கோட்டை
திருமயத்தில் நடைபெற்ற வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

முன்னதாக, வாக்காளர்களின் உறுதி மொழியான, ‘இந்தியக் குடிமக்களாகியநாங்கள், ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலை நிறுத்துவோம் என்றும்,

ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமின்றியும் மதம், இனம், சாதி, சமூகத் தாக்கமின்றியும் அல்லது வேறு ஏதேனும் தூண்டு தல்களின்றியும் வாக்களிப்போம் என்றும் இதனால் உறுதியளிக்கிறோம் என்ற உறுதி மொழியினை, அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏற்றுக்கொண் டனர்.அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top