Close
செப்டம்பர் 20, 2024 6:33 காலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சை தொகுதி திமுக வேட்பாளருடன் தேர்தல் பணி ஆலோசனை

தமிழ்நாடு

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலி  தஞ்சாவூர் கீழ ராஜவீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து தலைவர்களிடம் வாழ்த்து பெற்றார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தஞ்சை திமுக பாராளுமன்ற வேட்பாளருடன் தேர்தல் பணி குறித்து கலந்தாலோசனை கூட்டம்.

நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலி  தஞ்சாவூர் கீழ ராஜவீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து தலைவர்களிடம் வாழ்த்து பெற்றார். தேர்தல் பணி குறித்து கலந்தாலோசனை செய்தார்.

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை அறிவித்து செயல்படுத்துவேன், நாட்டில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியை முதன்மை பாராளுமன்ற தொகுதியாக மாற்றுவேன் எனவும் உறுதி அளித்தார்.

இந்த நிகழ்வில் தஞ்சை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருடன் திருவையாறு சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான துரை.சந்திரசேகரன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினரும்,திமுக மையக்குழு உறுப்பினருமான டி.கே.ஜி நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி, மாவட்ட துணைச் செயலாளர் கோ.சக்திவேல்,

வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, மாவட்ட பொருளாளர் பேராசிரியர் பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் சி.சந்திரகுமார், வெ.சேவையா, ம.விஜயலெட்சுமி, ந.பாலசுப்பிரமணியன், தஞ்சை மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.ஆர்.முகில், தங்க.சக்கரவர்த்தி, இராமலிங்கம், சேகர்,

விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்.ராமச்சந்திரன், சோ.பாஸ்கர், சாமு.தர்மராஜன், வீரமோகன், ஆர் .கே.செல்வகுமார், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி. முத்துக்குமரன், அரசு போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top