Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த எம்.பி ராசா

திமுக

சத்தியில் திமுக வேட்பாளைர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றிய நீலகிரி எம்.பி ராசா

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற  கூட்டத்தில் திமுக வேட்பாளர்களை எம்.பி ஆ. ராசா அறிமுகம் செய்து  வைத்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ல் நடைபெற  உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், சுயேட்சைகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து விட்டு தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், சத்தி நகராட்சி, கே.என் பாளையம், அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சத்தியிலுள்ள  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், நீலகிரி மக்களவை தொகுதி  எம்.பி. ஆ. ராசா கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அறிமுக கூட்டத்தில், மாவட்டச்செயலாளர் நல்லசிவம், சத்தி நகரப்பொறுப்பாளர் ஜானகி, சத்தி யூனியன் சேர்மேன் இளங்கோ மற்றும் கூட்டனி கட்சியினர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top