Close
செப்டம்பர் 19, 2024 10:55 மணி

தமிழக நிதியை கொள்ளையடித்த கூட்டம் அதிமுக: அமைச்சர் மெய்யநாதன் தாக்கு

புதுக்கோட்டை

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல தமிழக நிதியை கொள்ளையடித்த கூட்டம் அதிமுகதான் என  சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்  தெரிவித்தார்.

புதுக்கோட்டை நகராட்சியை பொருத்தவரைக்கும் தமிழக முதலமைச்சர் 7 மாத கால ஆட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக எல்லா இடங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு வாக்களிப்பது என முடிவெடுத்து மக்கள் அலையலையாக ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டால் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்பார்கள் இந்த தேர்தலில்  செயல்பாட்டுக்கு கிடைத்திருக்கின்ற வெற்றி பெண்கள் பொதுமக்கள் வாக்காளர்கள் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் திமுக கூட்டணி மிகப் பெரும்பான் மையான இடங்களில் வெற்றி பெறும் இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய வெற்றியை புதுக்கோட்டை நகராட்சி சேர்ந்த அத்தனை மக்களும் தர தயாராக இருக்கிறார்கள்.

கடந்த கால ஆட்சியை ஒரு மக்கள் விரோத ஆட்சி ஒட்டுமொத்தமாக தமிழக மக்களுடைய வாழ்வாதாரத்தை மட்டுமல்ல தமிழக நிதியை முழுவதும் கொள்ளையடித்த கூட்டம். அக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேர்மையான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top