Close
செப்டம்பர் 20, 2024 4:07 காலை

புதுகை நகராட்சி 27 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி 27 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி

புதுக்கோட்டை நகராட்சிக்கு   27 -ஆவது வார்டில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக  போட்டியிடும் ஏ.எம்எஸ். இப்ராஹிம்பாபு –வுக்கு ஆதரவாக அவரது வார்டில்  தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பிரசாரம் செய்து  கை சின்னத்துக்கு  வாக்கு சேகரித்தார். இந்த வார்டில் ஆண், பெண் உள்பட மொத்தம் 3,100 வாக்காளர்கள் உள்ளனர்.

காங்கிரஸ்  நகரத்தலைவராக உள்ள இப்ராஹிம் பாபு  ஏற்கெனவே  2 முறை புதுகை நகர்மன்ற உறுப்பினராக வகித்தவர். மூன்றாவது முறையாக தற்போது களம் காண்கிறார்.  இவர் தனது வார்டுக்குள்பட்ட கீழ 2, 3 வீதிகள், சக்கரவர்த்தி அய்யங்கார் சந்து, ராணிஸ்கூல் சந்து, பெருமாள்கோவில் வீதி, நெல்லுமண்டித் தெரு, தெற்கு 2,3, 4 வீதிகள் மற்றும் வெள்ளையப்ப ராவுத்தர் சந்து உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில். புதுக்கோட்டை நகராட்சி 27 -வது வார்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை சட்டத்துறை அமைச்சர்  எஸ்,ரகுபதி  திறந்து வைத்து  அப்பகுதியில் பிரசாரம் செய்து  வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், புதுக்கோட்டை எம்எம்ஏ டாக்டர் வை.முத்துராஜா,  முன்னாள் எம்எல்ஏ -க்கள் பெரியண்ணன் அரசு,  ரா.சு. கவிதை பித்தன்,  திமுக நகர செயலாளர் க,நைனா முஹம்மது.  நிர்வாகிகள் த. சந்திரசேகரன், கீரை தமிழ்ராஜா,  திமுக 27-ஆவது வட்டச் செயலாளர் சேட்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்  ராயல் வி.முருகேசன், காங்கிரஸ் முன்னாள் மாநிலச் செயலர் வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன்.  முன்னாள் நகர்மன்றத்தலைவர் துரை திவ்யநாதன், மாருதி கண. மோகன்ராஜா , ஜி.எஸ். தனபதி, தீன். குட்லக் மீரா,  ப்துல்லாஹ், மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top