Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

புதுகை நகராட்சி 15 வது வார்டில் பாஜக வேட்பாளர் தீவிர பிரசாரம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியில்  15 -ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காடுவெட்டிகுமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

புதுக்கோட்டை நகராட்சியின் 15 -ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காடுவெட்டி குமார் வியாழக்கிழமை கீழ மூன்றாம் வீதி பெருமாள் கோயில் சந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட 42 வார்டுகளில் மொத்தம் 282 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதையடுத்து ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு கெட்டப்புகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 15 -ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காடுவெட்டி குமார் கீழ மூன்றாம் வீதியில் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிரப் பிரசாரத்தில் வீடுவீடாக சென்றபோது பெண்கள் அவருக்கு திருஷ்டி பூசணிக்காயுடன் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top