Close
செப்டம்பர் 20, 2024 1:23 காலை

கோபிச்செட்டிபாளையம் ஒன்றியம் கோட்டுப்புள்ளாம்பாளையம் ஊராட்சி உறுப்பினர் தேர்தல்: அதிமுக வேட்பு மனு தாக்கல்

ஈரோடு

கோபி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டுப் புள்ளா ம்பாளையம் ஊராட்சி 1வது வார்டுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வசந்தா, உதவி தேர்தல் அலுவலர் அருளரசியிடம் மனு தாக்கல் செய்தார்.

கோபி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கோட்டுப்புள்ளாம் பாளையம் ஊராட்சி 1 -ஆவதுஉறுப்பினர் வெள்ளிங்கிரி
கொரானாவால்  உயிரிழந்தார். இதைடுத்து காலியாக உள்ள ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 20 -ஆம் தேதியில் இருந்து மனு பெறப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கோட்டுப்புள்ளாம்பாளையம் ஊராட்சி 1-ஆவது வார்டில் 553 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் வசந்தா, உதவி தேர்தல் அலுவலர் அருளரசியிடம் மனுதாக்கல் செய்ய கடைசி நாளான (ஜூன் 27) திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஜூலை 9 -ஆம் தேதி வாக்குபதிவு, 12 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் அனுராதா, ஒன்றிய குழு தலைவர் வழக்கறிஞர்  மவுதீஸ்வரன், ஊராட்சி தலைவர் முத்துகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top