Close
செப்டம்பர் 20, 2024 12:39 காலை

பிணையில்லா கடன் திட்ட வட்டி விகிதத்தை 9 %  குறைக்க வலியுறுத்தல்

ஈரோடு

கூட்டத்தில், சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் நடராஜ முதலியார் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.

பிணையில்லா கடன் திட்ட வட்டி விகிதத்தை 9 %  குறைக்க வேண்டுமென  மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 2 -ஆவது செயற்குழுக் கூட்டம் நசியனூர் சாலையில் உள்ள சங்கத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் கே.கே.பாலுசாமி பங்கேற்றுப் பேசினார்.
இக்கூட்டத்தில், சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் நடராஜ முதலியார் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.தொடர்ந்து, கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்கள், சிவநேசன், ஜெகதீசன், தேவராஜா, முன்னாள் செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கெளரவிக்கப்பட்டனர்.

ஈரோடு

தொடர்ந்து, அரசின் பிணையில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி சில்லறை மற்றும் மொத்த வணிகர்களுக்கும் கடன் வழங்க வேண்டும்.
தற்போது பிணையில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள 12% வட்டியை 9 %  குறைத்து வழங்க ஆவண செய்ய வேண்டும்.
தற்போது, ஜி.எஸ்.டி. செலுத்தும் போது சலானில் மதிப்பீட்டா ளர்கள் கட்டாயம் ஒப்பமிட வேண்டும் என வங்கிகள் கூறுகின்றன. இந்த நடைமுறை தொழில் வணிகர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.

எனவே, முகவர்கள் ஒப்பமிட் டாலே வங்கிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார். இதில், கூட்டமைப்பின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top