Close
செப்டம்பர் 19, 2024 11:22 மணி

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்டு தர அரசு அதிகாரிகள் அலட்சியம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோயில் நிலத்தை மீட்ட கிராமக்கள் கோரிக்கை

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்டு தர அரசு அதிகாரிகள் அலட்சியம் செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை அருகே மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள  உலகநாயகி அம்பாள் கோவிலுக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலப்பரப்பில் தனி நபர்கள் ஒரு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளனர்.

அந்த வீடு கட்டி இருக்கும் இடம் மழை நீர் வரத்து வாரியாகும் மற்றொரு இடத்தில் ஒரு ஏக்கர் நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி மதுரை நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவில் நிர்வாகியும் கவுன்சிலர் மனோகரன் கூறியதாவது:  மாவட்ட நிர்வாகத்திடமும் 10 முறை மனுக்கள் அளிக்கப்பட்டும் அரசு அதிகாரிகள் நேரில் வந்து விசாரணையும் மேற்கொள்ளாமல் நிலத்தையும் மீட்டு தராமல் அலட்சியப்படுத்தி வருகிறார்கள்.

இந்த கோவிலுக்கு 500 தளக்கட்டுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர் எனவே கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து விரைவில் அரசு அதிகாரிகள் மீட்டு கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும் என கோவிலில் வழிபடும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top